Thursday, 3 May 2012

பேரரசு

 
 
மனிதன் தனிமையில் இருந்தால் என்ன என்ன சிந்தனைகள் வருகிறது? அப்படியே தனிமையில் வார கடைசியாக இருப்பதால் சற்றே இளைப்பாற்ற ஒரு படம் பார்த்தல் என்ன என்று தோனியது. படம் என்றதும் கேப்டன் தான் முதலில் நினைவுக்கு வந்தார் சரி, நமக்காக ஆயிரம் வெப்சைட் இல் இலவச சினிமா உள்ளன என்று தேடியபோது லொட் என்று பேரரசு என்ற தலைப்பு தெரிந்தது . விட்டுவிடுவேனா என்ன. சரி இனி படம் பார்ப்போம்.
 
ஒரு ஊர்ல ஒரு ஜட்ஜ் இருந்தாராம். அவரு திடீர்னு காணாமல் போய் விடுகிறார். அவரை கண்டு புடிக்க முடியாமல் திணறும் காவல் துறை என்ன செய்யும்? CBI அதிகாரி காசி விஸ்வநாதன் மட்டும் தான் இதற்கு உள்ள ஒரே தீர்வு . ஆம்... அவர் தான் நமது கேப்டன் . வழக்கம் போல அவரை சுற்றி சுற்றி ஒரு வட நாட்டு ஹீரோஇன் வருகிறார். பாவம், வழக்கம் போல டூயட் மற்றும் குழந்தைகளுடன் விளையாடுவது போன்ற முக்கியமான காட்சிகளில் தரிசனம் தருகிறார்.
 
இப்போ முக்கியமான பகுதிக்கு வருவோம். அதானுங்க துப்பறிதல். எப்டியோ ஆண, குதிரை எல்லாம் செஞ்சு நம்ம காசி விஸ்வநாதன் ஊர்ல நடக்குற பிக் பாக்கெட் ல இருந்து பெரிய பெரிய குண்டு வெடிப்பு வரைக்கும் சமந்தப்பட்டு இருக்கிறது ஒரு அரசியல் வாதி மூன்று பெரிய போலீஸ் அதிகாரியின் துணையோடு என்று  கண்டுபுடிசுடுராறு . இதற்கு தொணைக்கு ஆனந்த ராஜ் மற்றும் கட்டவிரல் ஒசரம் இருக்கற constable பாண்டிய ராஜன் .
 
சொல்லி வெச்ச மாதிரி அந்த கெட்ட போலீஸ் அதிகாரிய யாரோ கொல்றாங்க . இப்போ தான் ஆட்டத்துல விறுவிறுப்பு . அவங்கள கொல்றது நம்ம காசியோட ஒட்டி பிறந்த சகோதரன் "பேரரசு" . அவங்க எப்டி பிரிஞ்சாங்க அப்டிங்கறது எல்லாம் ஒன்னும் தெளிவா படியல ஆகவே அத விட்ருவோம். வழக்கம் போல கேப்டன் இன் தந்தை (சரத் பாபு) ரொம்ப நல்லவரு. அவர பிரகாஷ் ராஜ் , மன்சூர்அலிகான் கொன்னுடுறாங்க அத பாத்தபேரரசு பழி வாங்குறாரு. பேரரசுக்கு தொட்டுக்க (மன்னிக்கவும்) தொணைக்கு சந்திரசேகர் , மற்றும் அவர் கிராமம் உள்ளது . இதை கண்டு பிடித்த காசி , பிளாஷ் பாக்கில் முழு கதை அறிந்து இருந்தும், காவலன் கடமை பேரரசுவை கைது செய்வேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு முயற்சிக்கிறார். எப்டின்னு தெரியல ஆனா பேரரசு மற்றும் காசி போட்ற டிரஸ் கலர் அதில் உள்ள மடிப்பு முதல் கொண்டு ஒரே மாதிரி இருப்பது ஆச்சரியத்தை கொடுக்கிறது (சூபர் சார் போங்க) ... 
 
கடைசி காட்சியில் வெடிகுண்டு வைத்த நாற்காலியில் பிரகாஷ் ராஜ் உட்கார்ந்த நிலையில், காசியை காப்பாற்ற வெகுண்டு ஓடுகிறார் பேரரசு . வெடிகுண்டு நிபுணர்கள் "புத்திசாலிதனமாக இந்த வெடிகுண்டு வெச்சுருக்காரு நு மெச்சுக்கும்போது எதனால் என்னை அடித்துக்கொள்வது என்ற எண்ணம் மேலோங்கியது. வெடிகுண்டை செயலிழக்க செய்த பேரரசு அங்கே நடக்கும் ரத்தகலரியில் மாண்டு மடிகிறார். காசி பிரகாஷ் ராஜை கொன்றவுடன் தான் எனக்கு நிம்மதியாக இருந்தது. படம் முடிந்தது என்று என்னும் சமயத்தில் பல குண்டுகளை உள்வாங்கிய பேரரசு , காசியிடம் சென்று துப்பாக்கியை வாங்கிக்கொள்கிறார். அவோரோட range க்கு கொஞ்சமாக டயலாக் பேசிவிட்டு சாகிறார் .
 
அப்பாடா முடிந்தது. மொத்தத்தில் பேரரசு - பேரிழப்பு